Skip to main content

Posts

சுடுகாட்டில் வீசும் தென்றல்…

நிண நாற்றம் சகிக்க முடியவில்லை நடு நிசி நாய்களின் குரூர வேட்கையும்தான் ஊழல் தீயின் தகிப்பில் கனன்றடங்கிச் சாம்பலாகிறது ஜனநாயகத்தின் ஒவ்வொரு உயிர்த்துளியும் சுடுகாட்டில் வீசும் தென்றலாக தேர்தல் விரிந்த ‘கை’கள் இப்போது கூப்பியபடி தமிழர்களிடம் வாக்கு கேட்டு… ஈழரத்தம் ருசித்த மூவண்ண நாவுகளுக்கு இன்னும் அடங்கவில்லை தமிழ்க் குருதி வேட்கை தமிழர்களின் அரசியலை பிரித்துப் போட்டு கலைத்து விளையாடி ரசித்துச் சிரிக்கிறாள் டெல்லி மோகினி சுவைக்காத மாங்கனி சீற்றம் தணிந்த சிறுத்தை சாட்டை இழந்து ஓரமாய்ச் சரிந்த பம்பரம் என தமிழ்க் கூறுகள் அனைத்தும் தன்னளவில் நீர்த்துப் போனது கண்டு அவளுக்கு தாழவில்லை பெரு மகிழ்ச்சி இங்கோ ராஜாஜிக்குப் பிறகு தம் குலத்துக்குக் கிடைத்த தலைமை போய்விடுமோ என்று பதறும் மற்றொரு கூட்டம்…. போதையில் தள்ளாடியபடி புரட்சி பேசி முரசு கொட்டும் முட்டாள் நடிகர் அவர் மூலமேனும் பொதுவுடைமை மலருமா என ஏங்கித்தவிக்கும் இலக்கிலா இடதுகள்…. பிரபலமான கோமாளிகள் என்ற பேரில் நாத்தழும்பேறப் பேசும் வடிவேல்களாம் அரசியல் ஈசல்கள் தண்ணீரைவிட ரத்தம் கெட்டியானது என ஸ்ரீ ரங்கத்துச் சொந்தங்களிடம் தஞ்...
ஒற்றைகளின் மரணம் குரல்களின் கூட்டம் பெரிதாய் ஒலிக்கிறது பெருகிவழியும் இத்திரளில் எதிர்த்திசை சுட்டி ஒற்றைகள் சில. முகத்திலறைந்தும் உமிழ்ந்தும் விரட்டிய பின்னரும்… தேடுதலற்றுத் திரும்ப மனமின்றி இலக்கை நோக்கி திமிறியபடியே முன்னேறி மூர்ச்சித்து மரிக்கும் ஒற்றைகள் குற்றுயிராய்த் துடிக்கும் அவற்றின் குவியல் மீது கம்பீரமாய் அணிவகுக்கும் குரல்களின் கூட்டம் குதிபோடும் பெருங்குரல்களின் கூச்சலிடையே பேரொலியாய் முணகும் ஒற்றையொன்று ‘மரணம் எமக்கல்ல’. மேனா.உலகநாதன்
சமரசம் எதுவும் சரியில்லாத பொழுது எல்லாம் சரிதான் வருவதாக சொன்னவன் போகிறான் போவதாகச் சொன்னவன் வருகிறான் புன்னகைக்குள் இருந்து சீறித்துளாவும் பாம்பின் நாவுகள் வெயிலோடு மழை... காலம் மாறிவிட்டதாக சொல்கிறார்கள் வெயிலும் மழையும் தொட்டுக் கொள்ளக்கூடாதா என்ன? வெயில் குளிர்கிறது மழை தகிக்கிறது எதுவும் சரியில்லாத போது எல்லாம் சரிதான். சிலந்தியிடம் சிக்கிய பூச்சியின் நியாயத்தை கேட்பவர் யார்? இப்போது படபடக்கும் பூச்சியைக் கண்டு பயம் கொள்கிறது சிலந்தி எதுவும் சரியில்லாத போது எல்லாம் சரிதான் சமரசங்களின் தாலாட்டில் சமர்த்தாய்த் துயில் கொள்கிறது சுயம். மேனா.உலகநாதன்
தேர்தல் திருவிழாவில் காணாமல் போகும் விவசாயிகள்! தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்பு அதன் உச்சக் கட்டத்தை நெருங்கி வருகிறது. கூட்டணி குறித்த கூட்டல், கழித்தல் கணக்குகள் முடிவுக்கு வந்து விட்ட நிலையில், வாக்குகளை அறுவடை செய்வதற்கான வியூகங்களை வகுக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் திருவிழாவில் உதிரிக்கட்சிகள் கூட உற்சாகத்துடன் வலம் வருகின்றன. சக்திக்குத் தகுந்த ‘சீட்டு’கள். இல்லாவிட்டால் ‘நிபந்தனையற்ற ஆதரவு’ என்ற  அறிவிப்புடன், அகப்பட்டதை சுருட்டி அரசியல் வியாபாரத்தில் லாபம் பார்த்துவிடுவது என்பதே அவர்களது அதிகபட்ச வேலைத்திட்டம். இப்படி, ஜாதி, வட்டாரம், தொழில் என ஏதோ ஓர் அடிப்படையில்  உதிரி இயக்கங்களாக ஒண்றிணைந்து, தேர்தல் காற்று வீசும்போதே தூற்றிக் கொள்ளத் தயாராகி விட்டன பல அமைப்புகள். ஆனால், கிராமப்புற வாக்குவங்கியின் பெரும்பான்மை எண்ணிக்கையாக இருக்கும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு மட்டும் இந்த தேர்தல் கால செப்படி வித்தை எப்போதுமே சாத்தியமாவதில்லை. அறுபது ஆண்டுகால ஜனநாயகத்தில் எந்த நிறைவையும் எட்ட முடியாமல் தவிக்கும் சில சபிக்...
இ(எ)ப்போதும் ஏமாற்றம்தான்… ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் வரிகள், விவசாயிகளுக்கு தற்போதெல்லாம் பெரிய நம்பிக்கையைக் கொடுப்பதில்லை. எத்தனை காலத்துக்கு வேண்டுமனாலும் மக்களை ஏமாற்றலாம் என்பதை நமது அரசுகள் மிகத்தெளிவாகப் புரிந்து வைத்திருப்பதே அதற்கு காரணம். 2011- 12ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் மூலம், மத்திய அரசு தனக்கு இருக்கும் அந்த ‘புரிதல் தெளிவை’ மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.  விவசாயத்தை நம்பிக்கையூட்டும் வாழ்வாதாரத் தொழிலாக மாற்றுவதற்குரிய சிறப்பான எந்த அம்சமும், இடம்பெறாமலே இந்த பட்ஜெட்டை சமர்ப்பித்து முடித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி. 2011 – 12ம் ஆண்டு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்க கூடிய ஒரே அறிவிப்பு, உணவு உறுதித் திட்டத்திற்கான மசோதா, நடப்பாண்டிற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்பது மட்டும்தான் என்கிறார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன். ஆனால், அதற்கான நிதி ஆதாரமே ஒதுக்கப்படாமல், எப்படி அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்கிறார் மற்றொரு பொருளாதர விமர்சகர். கடந்த 2010 – 11ம் ஆண்டு, உணவுப் பொரு...
எதற்கு இந்த இரட்டை வேடம்? “இந்த அரசுக்கு பதின் ஆண்டுகளின் ( Decades) தொடக்கம் எது என்பதே இன்னும் தெரியவில்லை. கடந்த 2010ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்து உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இதே போன்று பதின் ஆண்டுகள் தொடங்குவதாக கூறினார். இந்த ஆண்டும் உரையின் தொடக்கத்தில் அதையே கூறுகிறார். இதில் இருந்தே இந்த அரசின் உணர்ச்சியற்ற தன்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது” மக்களவையில், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ்காரட்,  இப்படித்தான் தமது உரையைத் தொடங்கினார். அவரது இந்த விமர்சனத்தை வெறும் அரசியல் நையாண்டியாகப் புறந்தள்ளி விட முடியவில்லை. ஒரு குடியரசுத் தலைவரின் உரையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற அதே உறுதி மொழிகளும், கருத்துருக்களும் இந்த ஆண்டும் இடம்பெறுவது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள எவரையும் ஆத்திரப்பட வைப்பதில் வியப்பில்லை. விலைவாசி உயர்வையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவதில் இதே மெத்தனப்போக்கை இந்த அரசு காட்டிவருவதாகவும்  பிரகாஷ் காரட் அப்போது குற்றம்சாட்ட...
நன்றாகவே…. சில மௌனங்கள் பல புறக்கணிப்புகள் பாடம் நடத்தியபடியே நகர்கிறது காலம். இலையுதிர்கால மரத்தில் இருந்து உதிரும் உயிர்த்துளி வெள்ளமெனப் பெருகிப் பரவ துளிர்க்கும் பசித்த மானுடம் வசந்தம் சூல்கொள்ளும் பூக்களின் தேன் துளி விஷமெனக் கரைந்து கொல்லும் விதி எனும் கற்பிதத்தை வீழும்போதே எழும் எமது வீறுதனில் மோதிச்சிதறும் அவர்தம் உன்மத்தம் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. மேனா.உலகநாதன்