புதிய பதிவு.... ஒளிர்ந்தும் ஒளிராத…. அன்று தீபாவளிப் பண்டிகை. நாடு முழவதும் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருந்த கொண்டாட்ட ஒளிவெள்ளத்தின் சிறு கீற்று கூட அங்கு கூடியிருந்தவர்களின் முகத்தில் விழவில்லை. வறுமையின் இறுக்கமும், பசியின் தீவிரமும், கனத்த போர்வையைப் போல இருளின் வடிவில் அவர்கள் மீது ஒரு சேரக் கவிந்து படர்ந்திருந்தது. ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டத்திற்கான குறைந்த பட்சக் கூலியை 100 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தித் தரவேண்டும் என வலியுறுத்தி, தீபாவளிக் கொண்டாட்டத்தைப் புறக்கணித்து, ஜெய்ப்பூர் நகரின் ஓர் இடத்தில் கூடியிருந்த ராஜஸ்தான் மாநில விவசாயத் தொழிலாளர்கள் தான் அவர்கள். அக்டோபர் 2ம் தேதி முதல் கடந்த 17ம் தேதிவரை ஏறத்தாழ 47 நாட்கள், அவர்கள் நடத்திய இந்தத் தொடர் போராட்டத்திற்கு, இறுதியில் வெற்றியே கிடைத்துள்ளது. விவசாயத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தால், பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்த அம்மாநில அரசு, அவர்களது கோரிக்கையை ஏற்று, கூலியை உயர்த்தித் தர ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், அரசுதரப்பில் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், கை...