Skip to main content

Posts

Showing posts from October 27, 2010
புதிய பதிவு.... இனி என்ன செய்யப் போகிறீர்கள்? இமயமும் குமரியும் நிலைகுலைந்து நிற்கிறது. காஷ்மீரின் தால் ஏரி குங்குமமாய்ச் சிவந்து கிடக்கிறது. இளைஞர்களும், பெண்களும் இந்திய ராணுவத்தின் ஒடுக்கு முறைக்கு எதிராக வீசி எறிந்த கற்கள் மலை போல் குவிந்து எழுந்து நிற்கின்றன. அதன் மேல் நின்று உரத்துக் கூவுவதைப் போல் சொல்லி இருக்கிறார் அருந்ததி ராய்… ‘காஷ்மீர் ஒரு போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது இல்லை. இது ஒரு வரலாற்று உண்மை’ இன்னொரு பக்கம், தமிழக மீனவர்கள் அனைத்து நம்பிக்கையும் வற்றிப்போன நிலையில், சாட்சிக்காரனை விட சண்டைக்காரனே மேல் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். அடுத்த மாதம் 5ம் தேதி, இலங்கை அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்து, தங்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சிக் கேட்க முடிவு செய்திருக்கிறார்கள். அருந்ததிராயின் வார்த்தைகளுக்காக கோபப்படும் நமது தேச பக்தர்கள், மீனவர்களின் இந்த முடிவுக்காக வெட்கப்படவில்லை. நொடிக்கு ஒரு முறை, இறையாண்மை குறித்து இரைச்சலிடும் இவர்களுக்கு, மீனவர்களின் இந்த நிலை குறித்து எந்தச் சங்கடமும் இல்லை. உலகின் மிக...