கடந்த 3.10.10ல் பிரசுராமான கட்டுரை.... ஒரு வழியாக மாகாத்மா காந்தியின் 141வது பிறந்த தினத்தையும் கொண்டாடித் தீர்த்துவிட்டோம். சும்மா சொல்லக்கூடாது. குளு குளு நடிகைகள் ‘கொஞ்சும் தமிழில்’ பேசும் பேட்டி என்ன, புதிய திரைப்படங்கள் குறித்த வசீகர விமர்சனங்கள் என்ன… இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றின் சிலமாதங்களுக்கு முன்னரே வந்த திரைப்படங்கள் என்ன… என இப்படிப் பல என்ன என்னக்களோடு, கோவணமும், கைத்தடியுமாய் அலைந்த காந்தியின் பிறந்தநாளை டிஜிட்டல் குவாலிட்டியில் கொண்டாடித் தீர்த்துவிட்டோம். இவ்வளவு குதூகல கொண்டாட்ட களேபரங்களுக்கு இடையே, பெரியார் திராவிடர் கழகம் என்ற அமைப்பு திருச்சியில் நடத்திய தீண்டாமை ஒழிப்புப் பிரிவை இழுத்து மூடும் போராட்டம், நம் கவனத்தை ஈர்த்ததுடன், அழுத்தமான கவலைகளையும் ஏற்படுத்தியது. ஏன்… காமன்வெல்த் ஊழல்களைவிட மோசமாக நம்மை வெட்கித் தலைகுனிய வைத்தது என்று கூடச் சொல்லலாம். காந்தி அடிகள் தன் கடைசி மூச்சுவரை உச்சரித்துக் கொண்டிருந்த இலட்சியச் சொல், தீண்டாமை ஒழிப்பு. நமது கெடுவாய்ப்பு, அது இன்றுவரை இலட்சியமாக மட்டுமே இருந்து வருவதுதான்....