தந்தை பெரியாரின் பிறந்த நாள் (17.09.13) நினைவாக..... பெரியார் : தவிர்க்க முடியாத தத்துவ ஆளுமை 1927 ம் ஆண்டு. பெங்களூருவுக்கு ஓய்வுக்காக வந்து தங்கியிருந்த காந்தியை பெரியார் சந்திக்கிறா். அப்போது நடைபெற்ற நீண்ட விவாதத்திற்குப் பின்னர் பெரியாரிடம் காந்தி கேட்கிறார். “உங்கள் கருத்து என்ன, இந்து மதம் ஒழிய வேண்டும், பிராமணர்கள் ஒழிய வேண்டும் என்பதாக நான் கருதலாமா?” அதற்கு, “இந்து மதம். அதாவது இல்லாத – பொய்யான – இந்த மதம் ஒழிந்தால் பிராமணர்கள் இருக்க மாட்டார்கள். இந்து மதம் இருப்பதால் பிராமணர்கள் இருக்கிறார்கள். நானும் தாங்களும் சூத்திரர்களாக இருக்கிறோம். எல்லாவித ஆதிக்கமும் பிராமணர்கள் கையில் இருக்கிறது என்கிறேன்” என்று பதில் சொல்கிறார் பெரியார். ஏறத்தாழ பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் நடத்திய இயக்கத்தின் வேலைத்திட்டம் குறித்த எளிய விளக்கமாகவோ, பிரகடனமாகவோ இதனைக் கொள்ளலாம். பிராமண எதிர்ப்பு என்ற புள்ளியில் இருந்து தொடங்கிய அவரது இந்தக் கலகப் பயணம், மெல்ல மெல்ல மொழி, இனம், சமூகநீதி என ராஜபாட்டையாக விரிவடைகிறது. பெரியா...