Skip to main content

Posts

Showing posts from February 3, 2011
என்ன குற்றம் செய்தார்கள்? ‘ நான் அப்போது நிறைமாத கர்ப்பிணி. மனிதக் கழிவுகளை அகற்றிக்கொண்டிருக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டேன். அப்போது எவ்வளவு கதறியும் என்னை கை கொடுத்துத் தூக்க யாரும் முன்வரவில்லை. கழிவோடு கழிவாக புறக்கணிக்கப் பட்டேன். பொதுவாக எங்களைப் பார்த்தாலே மூக்கைப் பொத்திக் கொண்டு, இரண்டு கைகளையும் ஆட்டி போ, போ என்று கூறி விரட்டுகிறார்கள்’ அனிதா, பஞ்சாப் மாநிலம். ‘நான் பள்ளியில் படித்த போது என்னை மட்டும் வேறு தட்டு மற்றும் குவளை எடுத்துவரச் சொல்லி விரட்டுவார்கள். கேட்டால் என் தாயார் மனிதக் கழிவுகளை அகற்றும் வேலை பார்த்துவருகிறாராம். இன்று வரை பள்ளிகளில் என் போன்ற குழந்தைகளுக்கு இந்த கொடுமை தொடர்கிறது. எங்கள் பிள்ளைகள் ஏன் பெரிய படிப்பு படிக்க முடியவில்லை. கலெக்டர் ஆக முடியவில்லை….’ உமையாள், தமிழ்நாடு. டெல்லியில் சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் ( Safai Karmachari Andolan) என்ற அமைப்பு சார்பில், சில மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்ட பெண்களிடமிருந்து பீறிட்ட, ஆயிரமாண்டுகால ரணத்தின் ரத்தம் தோய்ந்த வார்த்தைகள்தான் இவை. இந்த பேரணியில...