மான் கீழ்மையும், சிறுமையும், கயமையும் மண்டிய வனத்தின் பெருமூச்சில் திளைக்கிறது அந்த மான் வெறித்தபடி துள்ளி ஓடும் அதன் குழந்தைமை பார்த்துச் சிரிக்கிறது அந்தக் கொடும் வனம் உயிர்ப்புக்கும் சாவுக்குமான போராக நடக்கும் தன் வாழ்வைக் கொம்பு கொண்டு துரத்த முயலும் அதன் புள்ளிகளில் இருந்து பெருக்கெடுக்கிறது கருணை