புதிய பதிவு.... தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்…? ம த்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் வழக்கம் போல எளிய மக்களுக்கு எதிரான தன் திருவுளத்தை, மீண்டும் ஒருமுறை திறந்து காட்டி இருக்கிறார். அனைவருக்கும் உணவு என்ற இலக்கை அடைய, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி அல்லது கோதுமையும், மற்றவர்களுக்கு 20 கிலோவும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மலிவு விலையில் வழங்க வேண்டும் என அண்மையில், சோனியாகாந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக்குழு பரிந்துரை செய்தது. இதன் மூலம், கிராமப்புற, நகர்ப்புற ஏழைகள் அனைவருக்கும் தவறாமல் உணவுகிடைப்பதை உறுதிப்படுத்த முடியும் என நம்பப் பட்டது. ஆனால்…. உணவுக் கழக கிடங்குகளில் கெட்டு வீணாகும் தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கினால் என்ன என்று உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, அதெப்படி முடியும் எனக் கொதித்தெழுந்த சரத்பவார், தற்போது தேசிய ஆலோசனைக் குழுவின் இந்தப் பரிந்துரைகளையும் புறந்தள்ளி இருக்கிறார். தேசிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை நிறைவேற்ற, ஆண்டுக்கு 610 லட்சம் டன் தானியம் கொள்முதல் செய்ய ...