Skip to main content

Posts

Showing posts from May 29, 2013
தகிக்கும் தென்றல் புழுக்கத்தின் அசைவில் இருந்து வீசத்தொடங்கியது தென்றல் மலர்கள் பொசுங்க இலைகள் வதங்க கைகளை வீசி நடந்தது மணல் பெருகிய நதியில் மிதந்து தகித்தது தண்ணீருக்காக அலைந்து கொண்டிருந்த மான்களின் ரோமங்கள் தீய்ந்து கருக தழுவிச் சோர்ந்து தவித்தது வியர்வையின் துளியில் உயிர்த்தது நதி.