ஒற்றைகளின் மரணம் குரல்களின் கூட்டம் பெரிதாய் ஒலிக்கிறது பெருகிவழியும் இத்திரளில் எதிர்த்திசை சுட்டி ஒற்றைகள் சில. முகத்திலறைந்தும் உமிழ்ந்தும் விரட்டிய பின்னரும்… தேடுதலற்றுத் திரும்ப மனமின்றி இலக்கை நோக்கி திமிறியபடியே முன்னேறி மூர்ச்சித்து மரிக்கும் ஒற்றைகள் குற்றுயிராய்த் துடிக்கும் அவற்றின் குவியல் மீது கம்பீரமாய் அணிவகுக்கும் குரல்களின் கூட்டம் குதிபோடும் பெருங்குரல்களின் கூச்சலிடையே பேரொலியாய் முணகும் ஒற்றையொன்று ‘மரணம் எமக்கல்ல’. மேனா.உலகநாதன்