Skip to main content

Posts

கவித் துளிகள்... பழுத்து உதிர்ந்த  இலையில் இருந்து நழுவி  என்மடியில் விழுந்து தவழ்ந்த  காலத்தின் பாடலில் திளைக்கிறேன் எனைத் தொல்லை செய்யாதீர் .......... என் புன்னகை விழுங்கி விடுமுன்  தப்பி விடு  உன் அகந்தை  உனைக் காக்குமெனில் ........... நீண்ட தூரம்  வலிகளின் ஊடாக  பயணித்த களைப்பில்  நிழலென நம்பி அமர்ந்து விட்டேன்  நச்சு மரத்தின் அடியில் ............. எல்லோரையும் போலத்தான் கிணற்று நீரில் தெரியும்  என் பிம்பத்தை  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் நழுவி உள்ளே விழுந்த தருணம் தான் தெரியவில்லை

மெரினா எழுச்சி – அரசியல் துறவு பயன் தருமா? : செம்பரிதி

ஜனவரி 24ம் தேதி இரவு. கடந்த சில நாட்களாக கடல் அலைகளுக்கு போட்டியாக ஆர்ப்பரித்து எழுந்து நின்ற இளைஞர் பெருந்திரளின் சிறு துளியாக இருள் கவிந்த மெரினாவில் சிலர் மட்டும்… போர் ஓய்ந்த பின்னரும் களத்தில் இருந்து வெளியேற விரும்பாத சில வீரர்களைப் போல… முகத்திலும், அகத்திலும் வெறுமை ததும்ப அங்கிருந்து அகன்றனர். ரேட்டிங்கிற்கான வாய்ப்பு இனி இல்லை என்பதாலோ, என்னவோ அதற்கு முன்னர் மெரினாவில் திரண்டிருந்த ஊடகப்படையும் அங்கிருந்து காணாமல் போயிருந்தது. ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததற்கான ஆணையைக் காட்டினால் மட்டுமே கலைந்து செல்வோம் என்பது அவர்களது கடைசிக் கட்டக் கோரிக்கையாக இருந்தது. இறுதியாக காவல்துறை உயரதிகாரி (மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன்) கூறிய சமாதானத்தை ஏற்று அங்கிருந்து கலைந்தனர். 8 நாட்களுக்கு முன்னர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தொடங்கிய போராட்டம், அப்போதுதான் முடிவுக்கு வந்ததாக சில நாளேடுகள் மட்டும் செய்தி வெளியிட்டிருந்தன. கடைசி,, கடைசியாக கூடி நின்றவர்கள் அப்துல் கலாமின் படத்தை பதாகையாக உயர்த்திப் பிடி...

அரசியல் பேசுவோம் -14 – அண்ணா நிகழ்த்திய அரசியல் வேதிவினை! : செம்பரிதி

1962ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி காமராஜர், மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சரானார். பக்தவச்சலம், கக்கன் உள்ளிட்டோர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். திருச்செங்கோடு இடைத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றி மாநில காங்கிரசாரை மட்டுமின்றி, மத்தியில் உள்ளவர்களையும் மலைக்க வைத்தது. விளைவு பிரிவினை கட்சிகளை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் அதனை அண்ணா எதிர்த்துப் பேசினாலும், மசோதா நிறைவேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக பிரிவினைத் தடைச்சட்டத்தை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுகக் வேண்டிய நெருக்கடி அண்ணாவுக்கு ஏற்பட்டது. கட்சியினரைத் தனித்தனியாகவும் ,அமைப்பு ரீதியாகவும், குழுக்களாகவும் அழைத்து பிரிவினைத் தடைச்சட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார் அண்ணா. கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்றாக இருந்த திராவிடநாடு கோரும் பிரிவைத் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். முடிவாக 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சியின் செயற்குழுவைக் கூட்டினார். அதில் திராவிட நாட்டை வலியுறுத்தும் கட்சியின் 2வது விதி திருத்தப்பட்டது. “தமிழகம...

ஈசலென வீழ்ந்ததேன்? -1 : செம்பரிதி (தேர்தல் முடிவு குறித்த அரசியல் பகுப்பாய்வு – குறுந்தொடர்)

1984ம் ஆண்டுக்குப் பிறகு, அந்த வரலாறு திரும்பி உள்ளது. ஆட்சியில் இருந்த கட்சியே அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நீடிக்கின்ற வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இந்த முடிவு ஜெயலலிதாவுக்கும், அவரது அடிப்பொடிகளுக்கும் மகிழ்ச்சியானதாக இருக்கலாம். அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் விரும்பியவர்களுக்கு இது அத்தனை உவப்பானதாக இருக்க முடியாது. மாற்றம் என்ற உடன் அந்தச் சொல்லை முழக்கமாக முன்வைத்து பரப்புரை மேற்கொண்ட அரசியல் கட்சியைச் சொல்வதாக நினைத்து விட வேண்டாம். உண்மையான மாற்றத்தை விரும்பிய பலர், கட்சி அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, தீவிரமான கவலைகளோடு இந்தத் தேர்தல் கூத்துகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர், கோபத்துடனும் கொந்தளிப்புடனும் பேசுவதைப் பார்க்க முடிகிறது. “என்ன இந்த மக்கள் இத்தனை மோசமாக இருக்கிறார்கள்…. ஒரு செல்போனுக்கும் சில நூறு ரூபாய்களுக்குமா வாக்களிப்பார்கள்…” என வெதும்புகிறார்கள். நியாயமான ஆத்திரம்தான். எதிர்த்து நின்ற அத்தனை பேரும் இத்தனை மோசமாக ஈசல்களைப் போல விழுந்ததேன்? என்ற கேள்வி, அழுத்தமான அரசியல் மாற்றத்தை விரும்பும் அத்தனை பேரது மனதிலு...

அரசியல் பேசுவோம் - 13 - எம்.ஜி.ஆர் தோற்றம் குறித்து அண்ணாவுக்கு எழுந்த சந்தேகம்! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

Arasyal Pesuvom - 13 _________________________________________________________________________________ 1952ம் ஆண்டு தமிழகத்தை கடும் புயல் தாக்கியது. இதில் திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திமுக திரை நட்சத்திரங்கள் மூலமாக நிதி திரட்டியது. கலைஞர் கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் இதற்கான பணியை முன்னெடுத்து 25 ஆயிரம் ரூபாய் நிதியைத் திரட்டி உள்ளனர். அப்போது நடைபெற்ற நிதியளிப்புக் கூட்டத்தில் எம்.ஜி.ஆரை டி.வி.நாராயணசாமி மூலம் தாம் சந்திக்க நேர்ந்த அனுபவத்தை அண்ணா மேடையில் பகிர்ந்து கொண்டார். முதன் முதலாக எம்.ஜி.ஆரைத் தாம் சந்தித்த போது அவர் பிராமணரோ எனத் தாம் சந்தேகித்ததாகவும், பின்னர் அவர் திராவிடர் என அறிந்து அகமகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 1953ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.ஆர்.ராமசாமி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே மேடையில் மின்னியது. எதிர்காலத்தில் திமுக அடைந்த வளர்ச்சிக்கு, இத்தகைய திரை நட்சித்தரங்களின் வர்ணஜால வசீகரம...

அரசியல் பேசுவோம் -12 - தமிழகத்தை அதிரவைத்த பகுத்தறிவுத் திரைவசனம்! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

1949ம் ஆண்டு, செப்டம்பர் 17ம் தேதி மாலை சென்னை ராபின்சன் பூங்காவில் நடைபெற்ற, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கவிழா பொதுக்கூட்டத்துக்கு பெத்தாம்பாளையம் பழனிச்சாமி தலைமை தாங்கினார். தலைவரின் முன்னுரைக்குப் பிறகு, ஏ.சித்தையன், என்.வி.நடராஜன், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, இரா.நெடுஞ்செழியன், மதுரை முத்து, கே.கே.நீலமேகம், சத்தியவாணி முத்து ஆகியோர் உரையாற்றினர். கே.கே.நீலமேகம் உரையாற்றிக் கொண்டிருந்த போது மழை தூறத் தொடங்கி உள்ளது. அண்ணா உரையாற்றத் தொடங்கிய போது, மழை கொட்டத் தொடங்கியது. ஆனாலும், அண்ணா பொழிந்த சொல்மழையில் லயித்திருந்த மக்கள் கூட்டம் சற்றும் கலையவில்லை. திராவிடர் கழகம் என்ற மரத்தின் ஒட்டுமாஞ்செடியாக முளைத்திருப்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் என்று அப்போது கூறிய அண்ணா, அது வேறு, இது வேறு மரமல்ல, இரண்டில் இருந்தும் பூத்துக், காய்த்துக் கனியப் போவது ஓரே கனிதான் என்று உறுதிபடக் கூறினார். தந்தையுடன் பிணக்கு ஏற்பட்டுப் பிரிந்தாலும், அவருக்குப் பிடித்த தனயனாகவே தனது அரசியல் தனிக்குடித்தனம் தொடரும் என்பதை எந்தக் குழப்பமும் இல்லாமல், திமுகவின் தொடக்கவிழாப் பொதுக்கூட்டத்திலேயே தெள...