Skip to main content

மிருகப்பிரவேசம்


அந்த விசித்திர  மிருகம் வந்தே விட்டது

கொன்று குவித்து ரத்தம் சுவைத்த 
சுவடுகள் உலர்ந்து உதிர்ந்து போனதாக நினைப்பு

உதடுகளைச் 
சப்பியபடியே அதன் அடுத்த உலாவைத் 
தொடங்கி விட்டது

வெறுப்பு அரசியலின் வீரதீர
முழக்கத்துடன் தன் அகண்ட கனவை
நனவாக்கும் பயணத்தையும் தான்

தேசிய ஒருமைப்பாடு
வந்தே மாதரம்
ராணுவ பக்தி
வீரர்களுக்கு அஞ்சலி
என வசீகரமான
அரசியல் ஒப்பனைகள்
அனைத்தையும்
புனைந்து வந்து 
அரங்கேறிய அதன்
நர்த்தனத்தை ரசிப்பதில்
நமக்கு எந்த வெட்கமும் இல்லை

தமிழில் வணக்கம் 
சொன்னால் போதும்
எவனும் நம் தலைவனாகி
விடுவான்

மற்றபடி 
கர்ப்பிணிப் பெண்ணின்
கருவறை பிளந்து
பச்சிளம் சிசுவை
அவள் கண்முன்னாலேயே
கூறுபோட்ட குஜராத்
குரூரம் குறித்தெல்லாம்
நமக்கென்ன கவலை

எங்கோ ஒரு இஸ்லாமியப்
பெண்ணுக்கு நேர்ந்தது 

அவள் என்ன 
நம் சகோதரியா
கதறவும் பதறவும்

நமக்குத் தேவை
இப்போது அரசியல் சுத்திகரிப்பு
இனச் சுத்திகரிப்பைப் போல

Comments

Popular posts from this blog

நெருடல் ----------------------------------------------------------------------- அவரைப் பார்த்தும் பாராதவனாய்த் திரும்பிக் கொண்டேன் பார்க்காமல் போகிறார் என்பதைப் பார்க்காமல் பார்த்திருக்கலாம்தான் கேள்வியும் பதிலும் உள் நெருடியது பார்த்தும் பாராமையை பார்த்தும் பாராமல் சென்ற அவரின் பக்குவம் பார்த்தும் பாராத நான்.   மேனா. உலகநாதன்

அரசியல் பேசுவோம் -14 – அண்ணா நிகழ்த்திய அரசியல் வேதிவினை! : செம்பரிதி

1962ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி காமராஜர், மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சரானார். பக்தவச்சலம், கக்கன் உள்ளிட்டோர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். திருச்செங்கோடு இடைத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றி மாநில காங்கிரசாரை மட்டுமின்றி, மத்தியில் உள்ளவர்களையும் மலைக்க வைத்தது. விளைவு பிரிவினை கட்சிகளை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் அதனை அண்ணா எதிர்த்துப் பேசினாலும், மசோதா நிறைவேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக பிரிவினைத் தடைச்சட்டத்தை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுகக் வேண்டிய நெருக்கடி அண்ணாவுக்கு ஏற்பட்டது. கட்சியினரைத் தனித்தனியாகவும் ,அமைப்பு ரீதியாகவும், குழுக்களாகவும் அழைத்து பிரிவினைத் தடைச்சட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார் அண்ணா. கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்றாக இருந்த திராவிடநாடு கோரும் பிரிவைத் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். முடிவாக 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சியின் செயற்குழுவைக் கூட்டினார். அதில் திராவிட நாட்டை வலியுறுத்தும் கட்சியின் 2வது விதி திருத்தப்பட்டது. “தமிழகம...
நன்றாகவே…. சில மௌனங்கள் பல புறக்கணிப்புகள் பாடம் நடத்தியபடியே நகர்கிறது காலம். இலையுதிர்கால மரத்தில் இருந்து உதிரும் உயிர்த்துளி வெள்ளமெனப் பெருகிப் பரவ துளிர்க்கும் பசித்த மானுடம் வசந்தம் சூல்கொள்ளும் பூக்களின் தேன் துளி விஷமெனக் கரைந்து கொல்லும் விதி எனும் கற்பிதத்தை வீழும்போதே எழும் எமது வீறுதனில் மோதிச்சிதறும் அவர்தம் உன்மத்தம் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. மேனா.உலகநாதன்