Skip to main content
ஆனாலும்...

திரும்பிப் பார்க்க என்ன இருக்கிறது
ஆனாலும் பார்க்கிறேன்

பசுஞ்சோலை
பூமரங்கள்
குளிர்ந்த நீரூறும் சுணை
மெல்லிய காற்று
இதமான வெயி்ல்
அழகிய பெண்கள்

என் வழியில் இப்படி
எதுவும் தென்பட்டதில்லை

இருந்தாலும் என்ன
கடப்பும் நடப்பும் தொடர்கிறது

.....................

என் புன்னகையின் வெறுமை
உங்களைச் சங்கடப் படுத்தக் கூடும்

எனை மறைத்துக் கொள்ளும்
சாகசம் அது
வேறென்ன செய்ய

சிரிப்பென்ன வேண்டிக் கிடக்கிறது
கேள்வி சரிதான்
பதிலாகவும் சிரிப்புதான் வருகிறது

அழுவதற்குக் கூடக் கற்றுத் தராத
50 ஆண்டுகால வாழ்வின் மீகு கோபமாய்
வருகிறது.

.......................

சரி ....  புறப்படுவோம்

உரையாடலை முடிக்காமலே
பிரியும் வலி


நாட்கள்
மாதங்கள்
ஆண்டுகள்
என வாழ்வின் நிழலாக
தொடரும் நமது
உரையாடல் வழியாக
எந்த ஜன்னலும் திறக்கவில்லை

உயிரற்ற சொற்களின்
அடர்த்தியில்
கைகள் குலுக்க முடியாமல்
கனத்துப் போயின

குரூரமும், துரோகமும், வஞ்சனையும்
கனன்றடங்கிச் சாம்பலென உதிரும்
உன் வார்த்தைகள்
படிந்து மங்கியது
என் மனவெளி

எனினும் என்ன
தொண்டைக்கும் வயிறுக்குமாய்
உருளும் இறுக்கத்துடன்
மீதமிருக்கும் என் சொற்களைச்
சுமந்து நாளையும் வருவேன்...

மேனா . உலகநாதன்










Comments

Popular posts from this blog

நெருடல் ----------------------------------------------------------------------- அவரைப் பார்த்தும் பாராதவனாய்த் திரும்பிக் கொண்டேன் பார்க்காமல் போகிறார் என்பதைப் பார்க்காமல் பார்த்திருக்கலாம்தான் கேள்வியும் பதிலும் உள் நெருடியது பார்த்தும் பாராமையை பார்த்தும் பாராமல் சென்ற அவரின் பக்குவம் பார்த்தும் பாராத நான்.   மேனா. உலகநாதன்

அரசியல் பேசுவோம் -14 – அண்ணா நிகழ்த்திய அரசியல் வேதிவினை! : செம்பரிதி

1962ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி காமராஜர், மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சரானார். பக்தவச்சலம், கக்கன் உள்ளிட்டோர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். திருச்செங்கோடு இடைத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றி மாநில காங்கிரசாரை மட்டுமின்றி, மத்தியில் உள்ளவர்களையும் மலைக்க வைத்தது. விளைவு பிரிவினை கட்சிகளை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் அதனை அண்ணா எதிர்த்துப் பேசினாலும், மசோதா நிறைவேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக பிரிவினைத் தடைச்சட்டத்தை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுகக் வேண்டிய நெருக்கடி அண்ணாவுக்கு ஏற்பட்டது. கட்சியினரைத் தனித்தனியாகவும் ,அமைப்பு ரீதியாகவும், குழுக்களாகவும் அழைத்து பிரிவினைத் தடைச்சட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார் அண்ணா. கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்றாக இருந்த திராவிடநாடு கோரும் பிரிவைத் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். முடிவாக 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சியின் செயற்குழுவைக் கூட்டினார். அதில் திராவிட நாட்டை வலியுறுத்தும் கட்சியின் 2வது விதி திருத்தப்பட்டது. “தமிழகம...
நன்றாகவே…. சில மௌனங்கள் பல புறக்கணிப்புகள் பாடம் நடத்தியபடியே நகர்கிறது காலம். இலையுதிர்கால மரத்தில் இருந்து உதிரும் உயிர்த்துளி வெள்ளமெனப் பெருகிப் பரவ துளிர்க்கும் பசித்த மானுடம் வசந்தம் சூல்கொள்ளும் பூக்களின் தேன் துளி விஷமெனக் கரைந்து கொல்லும் விதி எனும் கற்பிதத்தை வீழும்போதே எழும் எமது வீறுதனில் மோதிச்சிதறும் அவர்தம் உன்மத்தம் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. மேனா.உலகநாதன்