Skip to main content
'ஹெல்த்சாய்ஸ்' மருத்துவ மாத இதழுக்காக (நவம்பர்) 'நமக்குள்ளே…' என்ற தலைப்பில் எழுதப்பட்ட தலயங்கம்...

நமது நாட்டில், 70 சதவீதம் மக்கள், நாளொன்றுக்கு 20 ரூபாய் மட்டுமே வருவாய் உள்ளவர்களாக உயிர் வாழ்ந்து வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
அதே நாட்டில் 7 ஆயிரம் டன் உணவுதானியம், மத்திய அரசின் உணவுக்கழக கிடங்கில் புழுவைத்துக் கெட்டுப்போன நிலையில்  கிடக்கிறது என்றால் அதனை என்னவென்று சொல்வது?
மத்திய அரசின் உணவுக் கழக கிடங்கில், கெட்டுப் போய் வீணாகும் பல ஆயிரம் கோடி டன் உணவு தானியங்களை, ஏழைகளுக்கு இலவசமாக வழங்க உத்தரவிடுமாறு, மக்கள் உரிமைக் கழகம், பல ஆண்டுகளுக்கு முன்னர் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வீணாகும் தானியங்களை ஏன் ஏழைகளுக்கு வழங்கக் கூடாது என கேள்வி எழுப்பினர். அப்படி எல்லாம் வழங்க சட்டம் இடம் கொடுக்காது என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு கடந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ‘அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் 67 ஆயிரம் டன் உணவு தானியம் வீணாகி உள்ளது. மத்திய அரசின் உணவுதானியக் கிடங்கில், 7 ஆயிரம் டன் மட்டுமே கெட்டுப் போய் உள்ளது’ என மத்திய அரசு வழக்கறிஞர் பெருமிதம் (?) பொங்கக் கூறியுள்ளார்.
கோபத்தின் உச்சத்துக்கே சென்ற நீதிபதிகள், ‘பட்டினியால் பலர் செத்துக் கொண்டிருக்கும் நாட்டில் 7 ஆயிரம் டன் உணவு தானியம் என்பது உங்களுக்கு அவ்வளவு சாதாரணமாகத் தெரிகிறதா? மாநிலங்கள் கேட்கும் தானியத்தை ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள். வீணாகும் தானியத்தை ஏழைகளுக்கு வழங்க உடனடியாக வழிவகைகளைக் கண்டறியுங்கள்’ என அறிவுறுத்தி உள்ளனர்.
நீதிபதிகளின் கோபம் நியாயமானதுதானே!
பசியும், வறுமையும் மலிந்த நாட்டில், தானியங்கள் கெட்டு வீணாவது குறித்து விவாதம் நடத்திக் கொண்டிருப்பது எத்தனை குரூரம்.
‘ஏழை மனம் கோபப் பட்டால் என்னென்னவோ நடக்கும்’ என்பதை மத்திய அரசு மறந்து விடக் கூடாது.
வறுமை ஒழிப்பில் தனிக்கவனம் செலுத்தப் படுவதாக, மத்திய அரசு தரப்பில் அவ்வப்போது கூறப்படுகிறது.  
அதனை உறுதிப் படுத்தும் வகையில், உணவு தானியக் கிடங்குகளில் வீணாகிக் கொண்டிருக்கும் தானியங்களை, ஏழைகளுக்கு எந்த தடையுமின்றி விநியோகிக்க,  மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே, சமூக மேம்பாட்டில் அக்கறையுள்ள அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.

Comments

Popular posts from this blog

நெருடல் ----------------------------------------------------------------------- அவரைப் பார்த்தும் பாராதவனாய்த் திரும்பிக் கொண்டேன் பார்க்காமல் போகிறார் என்பதைப் பார்க்காமல் பார்த்திருக்கலாம்தான் கேள்வியும் பதிலும் உள் நெருடியது பார்த்தும் பாராமையை பார்த்தும் பாராமல் சென்ற அவரின் பக்குவம் பார்த்தும் பாராத நான்.   மேனா. உலகநாதன்

அரசியல் பேசுவோம் -14 – அண்ணா நிகழ்த்திய அரசியல் வேதிவினை! : செம்பரிதி

1962ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி காமராஜர், மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சரானார். பக்தவச்சலம், கக்கன் உள்ளிட்டோர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். திருச்செங்கோடு இடைத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றி மாநில காங்கிரசாரை மட்டுமின்றி, மத்தியில் உள்ளவர்களையும் மலைக்க வைத்தது. விளைவு பிரிவினை கட்சிகளை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் அதனை அண்ணா எதிர்த்துப் பேசினாலும், மசோதா நிறைவேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக பிரிவினைத் தடைச்சட்டத்தை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுகக் வேண்டிய நெருக்கடி அண்ணாவுக்கு ஏற்பட்டது. கட்சியினரைத் தனித்தனியாகவும் ,அமைப்பு ரீதியாகவும், குழுக்களாகவும் அழைத்து பிரிவினைத் தடைச்சட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார் அண்ணா. கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்றாக இருந்த திராவிடநாடு கோரும் பிரிவைத் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். முடிவாக 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சியின் செயற்குழுவைக் கூட்டினார். அதில் திராவிட நாட்டை வலியுறுத்தும் கட்சியின் 2வது விதி திருத்தப்பட்டது. “தமிழகம...
நன்றாகவே…. சில மௌனங்கள் பல புறக்கணிப்புகள் பாடம் நடத்தியபடியே நகர்கிறது காலம். இலையுதிர்கால மரத்தில் இருந்து உதிரும் உயிர்த்துளி வெள்ளமெனப் பெருகிப் பரவ துளிர்க்கும் பசித்த மானுடம் வசந்தம் சூல்கொள்ளும் பூக்களின் தேன் துளி விஷமெனக் கரைந்து கொல்லும் விதி எனும் கற்பிதத்தை வீழும்போதே எழும் எமது வீறுதனில் மோதிச்சிதறும் அவர்தம் உன்மத்தம் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. மேனா.உலகநாதன்