Skip to main content

Posts

அரசியல் பேசுவோம் – 5 : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

Arasiyal pesuvom – 5 இருண்ட காலத்திலும் வெளிச்சம் தேடிக் கொண்ட எம்.ஜி.ஆர்! _________________________________________________________________________________ காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றது. “கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்…” என மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (எம்.ஜி.ஆர் முழுமையாக நடித்து வெளிவந்த கடைசித் திரைப்படம் இதுதான்) படத்தில் இடம் பெற்ற பாடல், மிக விரைவிலேயே உண்மையாகப் போகிறது என அப்போது பலரும் எதிர்பார்க்கவில்லை. ஜனநாயகம் என்ற அரசியல் வடிவத்தின் அழகும், அவலமும், புதிரும் அதுதான். 1975ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியால் அறிவிக்கப்பட்ட அவசரநிலைப் பிரகடனம், இந்திய அரசியலை மட்டுமின்றி, தமிழக அரசியலையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. இந்திராகாந்தியின் அவசரநிலைப் பிரகடனத்தை, திமுக கடுமையாக எதிர்த்தது. எம்.ஜி.ஆர் முழுமூச்சுடன் ஆதரித்தார். அவரைத் தலைவராக உருவெடுக்க வைக்க அரும்பாடு பட்டுக் கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அவசர நிலைப் பிரகடனத்தை ஆதரித்தது. வலதுசாரிகளை வீழ்த்துவதற்காக அவசரநிலையை ஆதரிக்கிறோம் என அக்கட்சியின் அப்போதைய தேசியத் தலைவர் ...

அரசியல் பேசுவோம் – 4 : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

Arasiyal pesuvom -4 _________________________________________________________________________________ அதிமுகவின் ஒற்றைக் கொள்கை! ‘எம்.ஜி.ஆர்” என்ற அரசியல் குழப்பத்தின் விளைவுகளைத் தமிழகம் சந்திக்கப் போகிறது என்பதற்கான கட்டியக் காட்சிகள், அண்ணா மறைவின் போதே தென்படத் தொடங்கி விட்டன. (திமுகவின் வரலாறு குறித்து விரிவாகப் பார்க்க இருப்பதால், அண்ணா ஆட்சிக்காலம் தொடர்பாக இப்பகுதியில் விவரிக்கவில்லை. அந்தத் தருணத்தில் திமுகவில் நடந்தேறிய மாற்றங்களில், எம்.ஜி.ஆர் தொடர்பானவை மட்டுமே இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன) திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளிலேயே அண்ணாவின் உடல்நலம் பாதிக்கப் பட்டது.1969ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அண்ணா மறைவுக்கு பிறகு அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது.   அண்ணாவிற்கு அடுத்த நிலையில் இருந்த நாவலர் நெடுஞ்செழியன் தற்காலிக முதலமைச்சராக இருந்தார். அதனால், அவரே முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற பேச்சு கிளம்பியது. கலைஞரும் அப்படித்தான் நினைத்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இரண்டாம் கட்ட தலைவர்களான கே.ஏ.மதியழகன், அன்பில் தர்மலிங்கம், மன்னை நா...

அரசியல் பேசுவோம் – 3 : இதயதெய்வத்தின் இதயம் பட்டபாடு! – செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

Arasiyal Pesuvom -3 : Chemparithi _________________________________________________________________________________ தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலத்திற்கும் மேல்  அமர்ந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றபிரம்மாண்ட இயக்கமான அதிமுகவின்   தோற்றம்  என்பது, ஒரே நாளில் ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளைவல்ல. 1953ல் துளசிமாலையும்,  சந்தனப் பொட்டும் துலங்கும் தோற்றத்துடன் அண்ணாவைச் சந்தித்த எம்.ஜி.ஆர்.,  படிப்படியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக பரிணமித்தபோதே, தம்மைச் சுற்றி தனிப்பட்ட  அரசியல் செல்வாக்கையும் மற்றொரு பக்கம்   வளர்த்துவரத் தவறவில்லை. எம்.ஜி.ஆர் தனிப்பட்ட அரசியல் ஆளுமையாக உருவெடுப்பதற்கு அவரது ரசிகர் மன்றக் கிளைகள் பெரும் காரணியாக அமைந்தன. அரசியல் எதிரிகளால் மலையாளி என அவ்வப்போது அடையாளப்படுத்தப் பட்ட போதும், அதனையும்தாண்டி தமிழர்களின் உணர்வோடு இரண்டறக் கலந்த நாயகனாக அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். லண்டன் சென்றிருந்த போது பிபிசி வானொலிக்கு அளித்த நேர்காணலில், இதுகுறித்த தமது உணர்வை ...

அரசியல் பேசுவோம் – 2 : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் புதிய தொடர்)

Arasiyal pesuvom – 2 : Chemparithi _________________________________________________________________________________ 1972ம் ஆண்டு, அக்டோபர் 17ம் தேதிதான் அது நடந்தது. தமிழக அரசியலின் திசையை திக்குத் தெரியாமல் சிதறடித்து, இன்றுவரை தெளிய முடியாத கதம்ப அரசியலாக மாற்றிய ஒரு புள்ளியின் தொடக்கம் என்றும் கூட அதைச் சொல்லலாம். ஆம்.. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆரால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அன்றுதான் தொடங்கப்பட்டது. “கலை, மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்கள், நாகரிகம், வாழ்க்கை முறை, வரலாறு, கலாச்சாரம், இன்னபிற துறைகளின் ஒருமைகளை இயற்கையாகப் பெற்ற – சேர்ந்து கிடக்கும் நிலப்பரப்பில் வாழ்கின்ற திராவிட மக்களிடையே, அனைத்துத் துறையிலும் இணைந்தும், இணையக் கூடிய துறைகளில் இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் இணையவும் அண்ணா திமுகழகம் விரும்புகிறது…” என்ற வாசகங்கள் இடம் பெற்ற 32 பக்க கொள்கை விளக்கக் குறிப்பின் வெளியீட்டுடன் 1972ம் ஆண்டு  அக்டோபர் 17ம் தேதி எம்.ஜி. ஆர் தலைமையிலான அதிமுக தொடங்கப்பட்டது. ஆக, திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான பகுத்தறிவு, மாநில சுயாட்சி உ...